Thursday 11 April 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:


முக நூல் சும்மா அரட்டை அடிக்க மட்டும் இல்லைங்க. பல நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நமக்கு அப்படியே ஏத்த மாதிரி இருக்கும். அப்படி தான் இந்த தகவலும் பெரும்பான்மையான கணவன்மார்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே எனக்கு பட்டது. அதான் இதை இங்கு பகிர்ந்து உள்ளேன்.


1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


மனைவியிடம் பிடிக்காத விஷயங்கள் 12 இருந்தாலும் பிடிச்ச விஷயங்கள் ஆயிரத்திற்கு மேல் உள்ளது. [வீட்ல சோறு கிடைக்கணும்ல நண்பர்களே! அதான் கடைசி இரண்டு வரிகள் நம்ம  பிட்டு எப்புடி?


நன்றி!!!!!!!!!! 

2 comments:

Anonymous said...

அட.. ஆமால...???!!!

ஹ..ஹ..ஹ..ஹா... உண்மைதான் நண்பரே.
ஆனால், பெண்களுக்கும் எதிர்ப்பார்ப்புன்னு ஒண்ணு இருக்கு ல?
சின்ன சின்ன விஷயங்கள் தானே? ஆண்கள் அனுசரித்து செல்வதுதால் நல்லது.

கடைசி பாயிண்ட் சூப்பர்.

Unknown said...

வருகைக்கும் கருதிடமைகும் நன்றி ஜெஸ்வா...