Sunday 4 November 2012

எதற்கு கொடுத்தோம் லஞ்சம்?


'லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்''லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்'

இது ஒரு படத்துல்ல வர வசனம் அது தான் இப்ப நம்ம நாடுள்ள நடக்குற உண்மையான நிலவரம். வயித்து பசிக்காக ஒருவன் திருடும் பொழுது அவனை தண்டிக்கும் நம் சமுதாயம் வேண்டும் என்றே லஞ்சம் என்ற பெயரில் திருடும்  ஒரு அரசியல்வாதியையோ மக்களை சுரண்டும் பெரும் நிறுவனத்தையோ இந்த சட்டமும் சமூகமும் ஒன்றும் செய்வதில்லை. முன்பை விட இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும். ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை.

இதனால் மக்களும் லஞ்சம் கொடுக்கும் மன நிலைக்கு வந்து விட்டார்கள். வீட்டில் டெலிபோன் பளுதடைந்தலோ சரி செய்ய வரும் ஊழியர்க்கு கேஸ் தாமதிக்காமல் விட்டிற்கு வர அவருக்கு மணி ஆர்டர் வந்தா அதை கொண்டு வரும் தபால்காரருக்கு வீட்ல பீஸ் போயிட்ட சரி செய்ய வரும் மின்வாரிய ஊழியர்  இப்படி எதற்கெடுத்தாலும் கொடுத்தல்  மட்டுமே நம்மால் எதையும் பெற முடியும் அந்த நிலைமைக்கு வந்து விட்டது நம் அன்றாட நிலைமை.சரி இந்த லஞ்சத்தை எப்படி ஒழிப்பது அதை பற்றிய தொகுப்பு கிழே.

லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை..?




லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்
சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!
[நன்றி-முகநூல்]

இது சிரிப்பதற்காக சொல்லவில்லை நமது நாட்டின் உண்மை நிலை இது தான். திருடன்கிட்டவே சாவிய குடுத்த என்ன ஆகும். நம் நாடுள்ள உள்ள திருடன்லையே பெரிய திருடன் நம்ம அரசியல்வாதி தான். திருடுன்ன என்ன தண்டனைன்னு சட்டம் போடுரவனும் அவன் தன இது வரை தப்பு பண்ணுன யாரும் தண்டனையை முழுதா அனுபவிச்ச மாதிரி தெரியல்ல அப்பரம் எதுக்குயா சட்டம். லஞ்சம் வாங்க கூடாது ன்னு ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து செயல் படும் போது மட்டுமே இவற்றை எல்லாம் ஒழிக்க முடியும்.
அது வரை இது தொடரும்.

4 comments:

செக்காரக்குடி♥கண்ணன் said...

ம்என்னபண்றதுஎல்லாம்நம்மதலையெழுத்து

Unknown said...

நண்பா வாங்க வாங்க தலை எழுத்த மாத்த ஐடியா இருக்கு நீங்க முதல் அமைசர் ஆயிருங்க நான் நிதி அமைசர் ஆயிறேன் ஹிஹிஹி

Unknown said...

ஹ்ம்ம்...இந்தியாவில் இப்படியாது இருக்கேன்னு சந்தோஷபடுங்கள்...
இங்கோ :P நல்ல ஒரு பதிவு//

Unknown said...

வருகைக்கு நன்றி தம்பி